சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருப்பு நிற ஆடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்திருந்த புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலானது. ஆனால் ஏற்கனவே நடிகை தீபிகா படுகோனே வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றில் இதேபோன்ற உடையை அணிந்திருந்ததாக குறிப்பிட்டு, இரண்டும் ஒன்று போலவே இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் இந்த ஒப்பீட்டை விரும்பாத பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா, உடனடியாக இதற்கு பதில் கொடுத்திருக்கிறார். அதாவது, “பார்வை இல்லாதவர்கள் தான் இந்த இரண்டு உடைகளும் ஒரே மாதிரி இருப்பதாக கூறுவார்கள். தவிர பிரியங்கா எப்போதுமே உயர்தரமான சிறந்த ஆடைகளையே அணிவார்” என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் தீபிகா படுகோனின் ஆடையை மறைமுகமாக மட்டம் தட்டி பேசியிருக்கிறார். தனது இந்த கருத்தை தொடர்ந்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் மீரா சோப்ரா.