நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' |
கொரோனா அலை முதல் முதலாக கடந்த வருடம் பரவிய போது தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. முடங்கிக் கிடந்த புதிய படங்களை வெளியிட மாற்று வழியாக ஓடிடி தளங்கள் மூலம் வெளியீடு நடந்தது.
தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் பல புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. ஆனால், அவற்றில் பெரும்பாலான படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தன. தியேட்டர்களில் பார்க்கும் திருப்தி ஓடிடி மூலம் பார்ப்பதில் கிடைக்கவில்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது.
இந்த இரண்டாவது அலை பரவலின் போது பாலிவுட்டில் முதல் பெரிய ஓடிடி வெளியீடாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த 'ராதே' படம் வெளியானது. ஆனால், படத்திற்கு மோசமான விமர்சனங்களும், வரவேற்பும்தான் கிடைத்தது. 249 ரூபாய் பணம் செலுத்தி பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
இதனிடையே, பைரசி மூலம் பல ரசிகர்கள் படங்களைப் பார்த்தது குறித்தும் சல்மான் கோபமடைந்தார். படத்தைக் கிண்டலடித்து விமர்சனம் செய்த கமால் கான் என்பவர் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் வழக்கு முடிவுக்கு ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்தனர்.
இப்படி தேவையில்லாத சர்ச்சைகள் வந்ததையடுத்து சல்மான் கான் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். இனி, எக்காரணத்தைக் கொண்டும் தன்னுடைய படங்களை ஓடிடியில் வெளியிடுவதில்லை, தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டாராம். இதனால், தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.