ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தற்போது கடினமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மனதளவில் மிகுந்த மன உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர். மக்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பதால் குடும்ப வன்முறைகள் பெருகி வருவதாகவும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஊரடங்கு காரணமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மக்களின் மனநலத்தை பராமரிக்கும் வகையில் அமீர்கானின் மகள் ஐரா கான், அகஸ்து பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது:
இந்த இக்கட்டான காலத்தில் வாழ்க்கையை எளிதாக்கும் வழிமுறைகளை மக்களின் மனங்களில் புகுத்தவே இந்த முயற்சி. இதன்மூலம் நம்முடைய நலனையும் பாதுகாத்துக் கொள்ள இந்த பவுண்டேஷன் உதவும். இது என்னுடைய முதல் முயற்சி. மக்களுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முதல் நோக்கம் என்கிறார்.