ஜெ.விக்னேஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பேசு. நாயகியாக விபா நடிக்கிறார். இவர் ஏற்கனவே லீலை படத்தில் நடித்துள்ளார். படத்தின் தலைப்பு `பேசு' என்று இருந்தாலும் படத்தின் கதாபாத்திரங்கள் அதிகமாக பேச மாட்டார்கள். வசனங்கள் குறைவாகவே இருக்கும். அப்புறம் ஏன் `பேசு' என்ற தலைப்பு? அது, உச்சக்கட்ட காட்சியில் தெரியும் என்கிறார், டைரக்டர் ரா.சிரில்.
ஒரு மழைக்காலத்தில் தொடங்கி, பனிக்காலத்தில் முடிவடைகிற எளிமையான காதல் கதை இது. கொடைக்கானல், ஊட்டி, மற்றும் குலுமனாலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். குலுமனாலி பகுதியில் உள்ள குலாபா என்ற இடத்தில், ரூ.30 லட்சம் செலவில், செயற்கை ரயில் நிலையம் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடைபெற்றது.
பேசு படத்தின் வசனங்களை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் ரா.சிரில். சூப்பர் ஸ்பிரிங்ஸ் என்டெர்டயின்மெண்ட் இந்தியா என்ற படநிறுவனம் சார்பில் வி.ஜெகன்னாதன் தயாரிக்கிறார்.