கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
விஜய் டிவியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா. ரித்திகா, சில தொடர்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்த போதிலும், பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலாவுடன் அவர் அடித்த ரைமிங் வசனங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தனக்கான ரசிகர்களை கண்டுகொண்டார்.
தற்போது பாக்கியலெட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா, அந்த தொடரில் சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரித்திகாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பாக்கியலெட்சுமி தொடரில் தொடக்கத்தில் ரித்திகாவுக்கு குறைவான காட்சிகளே இருந்தது. ஆனால், தற்போது விஜே விஷால் - ரித்திகா ஜோடி சிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.