நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சின்னத்திரை பிரபலமான மா கா பா ஆனந்த நல்ல கலைஞன் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பதை அவருடன் பழக வாய்ப்பு கிடைத்த அனைவருமே கூறியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் சிறந்த ஆண் தொகுப்பாளருக்கான விருதை மா கா பா பெற்றார்.
அப்போது விஜய் டிவி சேனல் ஹெட் விருதை வழங்கிவிட்டு, மா கா பா வை பற்றி பேசும் போது, எப்போதுமே தன்னை பிஸியாக வைத்திருக்கும் மா கா பா சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. இது அவரது உடல்நலனுக்கு நல்லதல்ல என்ற தகவலை வருத்தத்துடன் பதிவு செய்தார்.
உதவும் குணம் கொண்ட மா கா பா பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு தன்னை எப்போதுமே பிஸியாக வைத்திருக்கிறார். பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சென்னையில் உணவின்றி தவிக்கும் பல ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் முயற்சியையும் செய்து வருகிறார். சமூகப்பணிகளை செய்வதோடு மட்டுமல்லாமல் அதை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன்னை போலவே பணி செய்யும் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதுபோல பல நற்பணிகளை செய்து வரும் மா கா பா வேலை மற்றும் சமூகப்பணிகள் இடையே தன்னை கவனித்துக் கொள்வதில்லை என அவரது நண்பர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.