அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சின்னத்திரை பிரபலமான மா கா பா ஆனந்த நல்ல கலைஞன் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பதை அவருடன் பழக வாய்ப்பு கிடைத்த அனைவருமே கூறியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் சிறந்த ஆண் தொகுப்பாளருக்கான விருதை மா கா பா பெற்றார்.
அப்போது விஜய் டிவி சேனல் ஹெட் விருதை வழங்கிவிட்டு, மா கா பா வை பற்றி பேசும் போது, எப்போதுமே தன்னை பிஸியாக வைத்திருக்கும் மா கா பா சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. இது அவரது உடல்நலனுக்கு நல்லதல்ல என்ற தகவலை வருத்தத்துடன் பதிவு செய்தார்.
உதவும் குணம் கொண்ட மா கா பா பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு தன்னை எப்போதுமே பிஸியாக வைத்திருக்கிறார். பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சென்னையில் உணவின்றி தவிக்கும் பல ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் முயற்சியையும் செய்து வருகிறார். சமூகப்பணிகளை செய்வதோடு மட்டுமல்லாமல் அதை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன்னை போலவே பணி செய்யும் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதுபோல பல நற்பணிகளை செய்து வரும் மா கா பா வேலை மற்றும் சமூகப்பணிகள் இடையே தன்னை கவனித்துக் கொள்வதில்லை என அவரது நண்பர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.