என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த மதுமிதா பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அமுதே, நாளை, ஆணிவேர், உள்பட பல படங்களில் நடித்தார். இங்கிலீஸ்காரன் படத்தில் நடித்த போது உடன் நடித்த சிவபாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் கடைசியாக யோகி படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது காதல் மெய்ப்பட என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மன்னன் மகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரை வாய்ப்புகள் என்னை விடாமல் துரத்திக் கொண்டேதான் இருந்தது. திருமணமான புதிதில் ராதிகா மேடம்கூட கூப்பிட்டாங்க. எனக்குதான் சின்ன தயக்கம் இருந்தது. அதற்குள் பையன் பிறந்திட்டான் அவனை கவனிக்க வேண்டியது இருந்தது. இப்போ அவன் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டான். தெலுங்குல சில டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்போதான் டி.வியோட ரீச் தெரிஞ்சுது. இப்போது துணிச்சலா சீரியல்ல நடிக்க வந்துட்டேன். என் கணவர் தெலுங்கு சினிமால பிசியா நடிக்கிறார். வார நாட்களில் சென்னையில் நடித்து விட்டு சனி, ஞாயிறில் ஐதராபாத்துக்கு பறந்திடுவேன். என்கிறார் மதுமிதா.