பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த மதுமிதா பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அமுதே, நாளை, ஆணிவேர், உள்பட பல படங்களில் நடித்தார். இங்கிலீஸ்காரன் படத்தில் நடித்த போது உடன் நடித்த சிவபாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் கடைசியாக யோகி படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது காதல் மெய்ப்பட என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மன்னன் மகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரை வாய்ப்புகள் என்னை விடாமல் துரத்திக் கொண்டேதான் இருந்தது. திருமணமான புதிதில் ராதிகா மேடம்கூட கூப்பிட்டாங்க. எனக்குதான் சின்ன தயக்கம் இருந்தது. அதற்குள் பையன் பிறந்திட்டான் அவனை கவனிக்க வேண்டியது இருந்தது. இப்போ அவன் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டான். தெலுங்குல சில டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்போதான் டி.வியோட ரீச் தெரிஞ்சுது. இப்போது துணிச்சலா சீரியல்ல நடிக்க வந்துட்டேன். என் கணவர் தெலுங்கு சினிமால பிசியா நடிக்கிறார். வார நாட்களில் சென்னையில் நடித்து விட்டு சனி, ஞாயிறில் ஐதராபாத்துக்கு பறந்திடுவேன். என்கிறார் மதுமிதா.