அண்ணன், தம்பியுடன் மீண்டும் கூட்டணியில் ஜிவி பிரகாஷ் | பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் | அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் |
அண்ணா சீரியலில் அடுத்தடுத்து என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்திய எபிசோடுகளில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் மக்களை கவர்ந்து வரும் இந்த தொடரில் வருகிற ஞாயிற்றுகிழமை சிறப்பு எபிசோடு ஒன்று ஒளிபர்பபாக உள்ளது. இந்த எபிசோடில் மக்கள் மனதில் இடம் பிடித்த சில பிரபலங்கள் என்ட்ரி கொடுக்க உள்ளனர். அயலி வெப் தொடர் மற்றும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து கலக்கிய காயத்ரி அப்பத்தாவாக அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்த பார்வதி, டபுள் ஆக்ஷனில் சரவணன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் செந்திலுக்கு ஜோடியாக கோப்பெருந்தேவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் சண்டே ஸ்பெஷல் எபிசோடு மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.