நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல் நடிகை மஹாலெட்சுமியை திருமணம் செய்ததால் சில நாட்கள் சோஷியல் மீடியாவில் இருவரும் டிரெண்டிங் ஜோடியாக இடம் பிடித்து வந்தனர். தொடர்ந்து பணமோசடி வழக்கில் கைதாகி சர்ச்சையில் சிக்கி அண்மையில் தான் வெளிவந்தார்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளிவந்த ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து ரவீந்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்ட ரவீந்தரை ரசிகர்கள் உடம்பை கவனிக்க சொல்லி அட்வைஸ் செய்து வருகின்றனர்.