வசூல் சாதனை படைக்குமா 'கல்கி 2898 ஏடி' ? | தனி விமானத்தில் பேச்சுலர் பார்ட்டி நடத்திய எமி ஜாக்சன் | நேசிப்பாயா : ஆகாஷ் முரளி பட டைட்டில் அறிவிப்பு | ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா | படத்திற்கு படம் எனது வேடத்தில் ஒரு தாக்கத்தை கொடுக்க விரும்புகிறேன் : ஷர்வரி | 4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் | 106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் |
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார் ரச்சிதா மஹாலெட்சுமி. அதன்பின் அவர் கமிட்டான சீரியல்கள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே தடைப்பட்டு நின்றுவிட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் ரச்சிதா சினிமாவில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அதுகுறித்தும் எந்தவொரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் போலீஸ் உடையணிந்து கெத்தாக போஸ் கொடுத்து 'விரைவில்' என வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்கிறாரா? சீரியலில் நடிக்கிறாரா? என்பது இதுவரை தெரியவில்லை. இருப்பினும் ரச்சிதாவின் கம்பேக் அப்டேட் அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.