நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார் ரச்சிதா மஹாலெட்சுமி. அதன்பின் அவர் கமிட்டான சீரியல்கள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே தடைப்பட்டு நின்றுவிட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் ரச்சிதா சினிமாவில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அதுகுறித்தும் எந்தவொரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் போலீஸ் உடையணிந்து கெத்தாக போஸ் கொடுத்து 'விரைவில்' என வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்கிறாரா? சீரியலில் நடிக்கிறாரா? என்பது இதுவரை தெரியவில்லை. இருப்பினும் ரச்சிதாவின் கம்பேக் அப்டேட் அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.