''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சென்னையில் ஏற்கனவே கனமழை காரணமாக சாலைகள் மோசமாக இருக்கிறது. அதில், வேன் டிரைவர் ஒருவர் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பொறுப்பில்லாமல் வேகமாக செல்கிறார். இது மட்டுமல்லாமல் தனது செல்போனில் பேசிக்கொண்டே வேனை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இதைபார்த்த பாரதி கண்ணம்மா சீரியலின் நாயகனான நடிகரான அருண் பிரசாத் அந்த டிரைவரை மடக்கி பிடித்து மெதுவாக ஓட்டும்படி அறிவுரை செய்ய, அதற்கு அந்த வேன் டிரைவர் அருண் பிரசாத்தை அநாகரீகமாக திட்டுகிறார். இதை வீடியோவாக எடுத்துள்ள அருண் பிரசாத் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததுடன், அந்த வேன் டிரைவர் மீதும் போலீஸில் புகார் அளித்துள்ளார். அருண் பிரசாத்தின் சமூக பொறுப்பை பாராட்டி சிலர் அவர் நிஜ வாழ்விலும் ஹீரோ ஆகிவிட்டதாக வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.