ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடிக்கடி நடிகர்கள் மாரி வருகின்றனர். இதுவரை 5 கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் மாறிவிட்டனர். அதிலும் இரண்டு ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டும் 5 முறை நடிகைகள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தொடர் குடும்பங்களுக்கு பிடித்த தொடராக தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நீண்டநாட்களாக நடித்து வந்த சாய் காயத்ரி தற்போது சீரியலை விட்டு விலகியுள்ளார். ஏற்கனவே, இந்த கதாபாத்திரத்தில் முதலில் வைஷாலியும் அதன்பின் வீஜே தீபிகாவும் நடித்து வந்தனர். இதில் தீபிகாவின் முகத்தில் சரும பிரச்னை அதிகம் இருந்ததால் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தான் சாய் காயத்ரி நடித்து வந்தார். தற்போது சாய் காயத்ரி விலகிவிட்ட நிலையில் வீஜே தீபிகா மீண்டும் சரவணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் தீபிகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.