ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

சின்னத்திரை இயக்குநர் பிரவீன் பென்னட் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சீரியல் நடிகர்களுக்கு கிடைக்கும் புகழ் இயக்குநர்களுக்கு கிடைப்பதில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், 'சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு முதல் காரணம் இயக்குநர்கள் தான். அதற்கு பிறகுதான் நடிகர்கள். சின்னத்திரையை பொறுத்தமட்டில் சீரியல் இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுப்பதில்லை. அதேப்போல் சீரியல் நடிகர்/நடிகைகள் பேட்டி கொடுத்தால் ஊடகங்களில் வைரலாகிறது. ஆனால், இயக்குநர் பேட்டி கொடுத்தால் மக்கள் அதை புறக்கணிக்கின்றனர். இந்த நிலை எனக்கு வருத்தமளிக்கிறது' என அதில் பேசியுள்ளார்.




