அரசியலில் ஜீரோ-வைக் கண்டுபிடித்த பவன் கல்யாண் : ராம் கோபால் வர்மா காட்டம் | மூன்று மொழிகளில் உருவாகும் தனுஷின் 51வது படம் | வசூலை குவிக்கும் அனிமல் : ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி படம் | கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி : யஷ் ஜோடி ஆகிறார் | பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக வருந்த மாட்டேன் : வனிதா மகள் கடிதம் | மம்முட்டி படத்துக்கு திடீர் எதிர்ப்பு | வாங்கிய அடி, உதை, காயங்கள் எல்லாமே நிஜம் : கல்யாணி பிரியதர்ஷன் நெகிழ்ச்சி | நடிகர் ரஹ்மானின் மகள் திருமணத்திற்காக ஒன்றுகூடிய 80ஸ் நட்சத்திரங்கள் | ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? - பார்த்திபன் | அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி |
குக்வித் கோமாளி சீசன் 4ல் இம்முறை புதிய கோமாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஒருவராக சோஷியல் மீடியாக்களின் மூலம் அடையாளம் காணப்பட்ட ஓட்டேரி சிவாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓட்டேரி சிவா முதல் இரண்டு எபிசோடுகளுக்கு பிறகு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைகர் கார்டன் தங்கதுரை என்ட்ரி கொடுத்துள்ளார். இதற்கு காரணமாக ஓட்டேரி சிவா குடித்துவிட்டு வருவதும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது செயல்கள் நாகரீகமாக இல்லை என்றும் செய்திகள் பரவின. இதனையடுத்து இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள ஓட்டேரி சிவா, 'நான் குடிக்கமாட்டேன். அவர்கள் சொல்வது பொய். சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்புடுவேன். நான் பிரபலமாகி அதிகம் சம்பாரிக்கிறேன் என்ற பொறாமையில் சிலர் அப்படி கூறுகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து என்னை நீக்கவில்லை. விரைவில் கூப்புடுகிறோம் என்று கூறியுள்ளனர்' என்றார். மேலும், தனது ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும்படியும் வேண்டுகோள் வைத்துள்ளார்.