'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

குக்வித் கோமாளி சீசன் 4ல் இம்முறை புதிய கோமாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஒருவராக சோஷியல் மீடியாக்களின் மூலம் அடையாளம் காணப்பட்ட ஓட்டேரி சிவாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓட்டேரி சிவா முதல் இரண்டு எபிசோடுகளுக்கு பிறகு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைகர் கார்டன் தங்கதுரை என்ட்ரி கொடுத்துள்ளார். இதற்கு காரணமாக ஓட்டேரி சிவா குடித்துவிட்டு வருவதும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது செயல்கள் நாகரீகமாக இல்லை என்றும் செய்திகள் பரவின. இதனையடுத்து இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள ஓட்டேரி சிவா, 'நான் குடிக்கமாட்டேன். அவர்கள் சொல்வது பொய். சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்புடுவேன். நான் பிரபலமாகி அதிகம் சம்பாரிக்கிறேன் என்ற பொறாமையில் சிலர் அப்படி கூறுகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து என்னை நீக்கவில்லை. விரைவில் கூப்புடுகிறோம் என்று கூறியுள்ளனர்' என்றார். மேலும், தனது ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும்படியும் வேண்டுகோள் வைத்துள்ளார்.