மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பிக்பாஸ் சீசன் 6ல் அதிகம் கவனம் பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலெட்சுமி. இறுதிப்போட்டிவரை நிச்சயமாக செல்வார் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்லிக்கொள்ளும் வகையில் கேமை விளையாடவில்லை. அழகுபதுமையாக வெகேஷனுக்கு சென்றது போல் பிக்பாஸ் வீட்டில் சுற்றித்திரிந்து பலரும் விமர்சிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்பது பலரின் விமர்சனமாக இருந்தது. இறுதியில், கடந்தவார எவிக்ஷனில் வெளியேறினார்.
இந்நிலையில், வெளியே வந்துள்ள ரச்சிதாவுக்கு நண்பர்களும் ரசிகர்களும் சேர்ந்து ஏகபோக வரவேற்பை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு ரச்சிதா வருகையில் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து ஆளுயர ரோஜாப்பூமாலையும் அணிவித்து வரவேற்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களால் அவரது வீட்டையும் அலங்கரித்து, மக்களின் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். மேலும், ரச்சிதாவை பற்றி 'அவள் ஒரு சபிக்கப்பட்ட தேவதை' என்ற அழகிய கவிதையையும் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தும் அழகிய வீடியோவாக தொகுக்கப்பட்டு 'வா தலைவி வா' என பில்டப் சாங்குடன் வெளியாகி ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இதைபார்க்கும் சிலர் 'ரச்சிதா எப்படி என்ன சாதிச்சிட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு?' என கேட்டு வந்தாலும், ரசிகர்களோ ரச்சிதாவை கொண்டாடி வருகின்றனர்.




