பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! |

சினிமா நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். எமோஷ்னல், பிளாக்மெயில், எதார்த்தமான நடிப்பு என தந்திரமான வில்லனாக வேற லெவலில் பெர்பார்மன்ஸ் செய்து வருகிறார். அவர் நடித்து வரும் கதாபாத்திரத்தை வேறு யாராலும் அவ்வளவு கச்சிதமாக செய்துவிட முடியாது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது சகோதர சகோதரிகளை செண்டிமெண்ட்டால் எமோஷ்னல் ப்ளாக்மெயில் செய்யும் மகாநடிகன் குணசேகரனுக்கு நிஜ வாழ்வில் அழவே தெரியாதாம். இதுகுறித்து மாரிமுத்து ஒரு நேர்காணலில் கூறிய போது, 'என் அப்பா செத்தப்ப கூட மனசுல வருத்தம் இருந்துச்சு. ஆனா அவர் அவரோட வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிட்டாரு. எல்லோரும் ஒருநாள் போகத்தான் போறோம்ங்கிற உண்மைய நிலைய புரிஞ்சிக்கிட்டவன் நான். அதனால் எதுக்குமே அழுகுறதே இல்லை. சீரியல்ல கூட க்ளிசரினை ஊத்தித்தான் அழுகுறேன்' என கூறியுள்ளார்.




