சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் | மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய் |

'சந்திரலேகா' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தார் நடிகை ஸ்வேதா பண்டேகர். சுமார் 8 வருடங்களாக ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக நீண்ட சீரியல் என்கிற சாதனையை படைத்திருந்தது. இந்த சீரியலானது சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றது.
இந்நிலையில், அவர் தனது அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான கதை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மாறாக, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தனது காதல் கதையை அப்டேட்டாக கொடுத்துள்ளார் ஸ்வேதா.
ஸ்வேதா தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 'என் இதயம் நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்து போனது. அதை இப்போது கண்டுபிடித்துவிட்டேன்' என பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தில் ஸ்வேதாவின் காதலர் பின்னால் திரும்பிய படி நிற்கிறார். எனவே, அவரை யார் என்று தெரிந்து கொள்ள முடியாத ரசிகர்கள் ஆர்வமிகுதியால் ஸ்வேதாவிடம் அவர் யார்? எப்போ ரிவீல் பண்ணுவீங்க? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.




