தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
'சந்திரலேகா' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தார் நடிகை ஸ்வேதா பண்டேகர். சுமார் 8 வருடங்களாக ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக நீண்ட சீரியல் என்கிற சாதனையை படைத்திருந்தது. இந்த சீரியலானது சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றது.
இந்நிலையில், அவர் தனது அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான கதை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மாறாக, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தனது காதல் கதையை அப்டேட்டாக கொடுத்துள்ளார் ஸ்வேதா.
ஸ்வேதா தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 'என் இதயம் நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்து போனது. அதை இப்போது கண்டுபிடித்துவிட்டேன்' என பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தில் ஸ்வேதாவின் காதலர் பின்னால் திரும்பிய படி நிற்கிறார். எனவே, அவரை யார் என்று தெரிந்து கொள்ள முடியாத ரசிகர்கள் ஆர்வமிகுதியால் ஸ்வேதாவிடம் அவர் யார்? எப்போ ரிவீல் பண்ணுவீங்க? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.