நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி கவனம் பெறாமல் சென்ற படம் ராதா கிருஷ்ணா. குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் உருவாகி இருந்த இந்த படம் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படததால் பெரிதாக பேசப்படவில்லை.
சிறுவன் கிருஷ்ணா (ஆதித்யா), யானை (ராதா) இருவரும் உடன்பிறவா சகோதரர்களாக வளர்கிறார்கள். பல வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் வனத்துறையினர் யானையை அழைத்துச் செல்கிறார்கள். கிருஷ்ணா தனது சகோதரனும் நண்பனுமாகிய யானையை நினைத்து மிகவும் ஏங்குகிறான். பின்னர் யானையை தேடி காட்டுக்குள் தன்னந்தனியே பயணத்தை மேற்கொள்கிறான். ராதாவும் கிருஷ்ணனும் மீண்டும் சந்திக்கிறார்களா என்பதே கதையின் முடிவு.
அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அழகான இயற்கை காட்சிகள், காட்டுக்குள் வரும் பிரச்சினைகளை காட்டி இருந்தது. புகழ், லிவிங்ஸ்டன் மற்றும் மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நாளை ( நவம்பர் 13) மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழில், தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.