காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராகவேந்திரன். புலி ராகவேந்திரன் என்று சொன்னால் தான் நேயர்களுக்கு தெரியும் வகையில், அவர் நடித்த 'புலி' என்கிற கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். கடைசியாக 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவேந்திரன் சம்பள பிரச்னை, வீட்டில் கமிட்மெண்ட் என சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். அதுகுறித்து அவர் வெளியிட்ட சோகமான வீடியோ ரசிகர்களையும் கண்ணீர் விட செய்தது.
இந்நிலையில், அவர் வாழ்வில் மேலும் ஒரு சோகமான சம்பவமாக புலி ராகவேந்திரனின் காதல் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ராகவேந்திரனின் உடல்நலம் மோசமடைய தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் ட்யூபுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவேந்திரன், 'ஒரே ஒரு ஒன்சைட் லவ், டோட்டல் பாடி க்ளோஸ். வேணாம் நண்பர்களே' என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அவரின் இந்த பரிதாப நிலையை பார்த்து சோகமான ரசிகர்கள், ராகவேந்திரனுக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.