50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் |

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராகவேந்திரன். புலி ராகவேந்திரன் என்று சொன்னால் தான் நேயர்களுக்கு தெரியும் வகையில், அவர் நடித்த 'புலி' என்கிற கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். கடைசியாக 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவேந்திரன் சம்பள பிரச்னை, வீட்டில் கமிட்மெண்ட் என சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். அதுகுறித்து அவர் வெளியிட்ட சோகமான வீடியோ ரசிகர்களையும் கண்ணீர் விட செய்தது.
இந்நிலையில், அவர் வாழ்வில் மேலும் ஒரு சோகமான சம்பவமாக புலி ராகவேந்திரனின் காதல் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ராகவேந்திரனின் உடல்நலம் மோசமடைய தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் ட்யூபுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவேந்திரன், 'ஒரே ஒரு ஒன்சைட் லவ், டோட்டல் பாடி க்ளோஸ். வேணாம் நண்பர்களே' என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அவரின் இந்த பரிதாப நிலையை பார்த்து சோகமான ரசிகர்கள், ராகவேந்திரனுக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.