சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் |
பிரபல பெண் கானா பாடகரான இசைவாணி சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும், அவரை பற்றிய தனிப்பட்ட விவகாரங்கள் எதுவும் முதலில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் இசைவாணியை பலரும் அறிவர். இசைவாணிக்கு முதலில் திருமணம் ஆகியிருந்த நிலையில், அவர் தனது கணவரை சில மாதங்களுக்கு முன் விவகாரத்து செய்திருந்தார். இசைவாணி தனது விவகாரத்து குறித்து பிக்பாஸில் பாவ்னி ரெட்டியிடம் பகிர்ந்திருந்தார். ஆனால், அவர்கள் பிரிந்ததற்கான காரணம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இசைவாணி அளித்துள்ள பேட்டியில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 'கானா பாடல் பாட என் வீட்டில் எனக்கு இருந்த ஆதரவு என் கணவர் வீட்டில் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் என் கணவரை விவாகரத்து செய்தேன்' என்று கூறியுள்ளார்.