அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா |
சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறது ஜீ தமிழ். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற இரண்டு சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளது.
மதியம் நேரம் ஒளிபரப்பாகி வந்த 'என்றென்றும் புன்னகை' தொடர் நாளை சனிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடரில் நக்ஷத்திரா, கவிதா, விஷ்ணுகாந்த், நிதின் ஐயர், சுஷ்மா நாயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேபோல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' தொடரும் வருகிற 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆஷா கௌடா, நந்த கோபால் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர்.
ஹிட் தொடர்கள் இரண்டும் அடுத்தடுத்த முடிவுக்கு வரவுள்ள நிலையில், இவற்றின் வெற்றிடத்தை புது சீரியல்கள் நிரப்புமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுத்துள்ளது.