சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறது ஜீ தமிழ். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற இரண்டு சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளது.
மதியம் நேரம் ஒளிபரப்பாகி வந்த 'என்றென்றும் புன்னகை' தொடர் நாளை சனிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடரில் நக்ஷத்திரா, கவிதா, விஷ்ணுகாந்த், நிதின் ஐயர், சுஷ்மா நாயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேபோல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' தொடரும் வருகிற 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆஷா கௌடா, நந்த கோபால் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர்.
ஹிட் தொடர்கள் இரண்டும் அடுத்தடுத்த முடிவுக்கு வரவுள்ள நிலையில், இவற்றின் வெற்றிடத்தை புது சீரியல்கள் நிரப்புமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுத்துள்ளது.