நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மே 8 அன்று ஒளிபரப்பாகவுள்ள 'அகண்டா' திரைப்படத்துடன் ஜீ தமிழின் கோடை பொழுபோக்கு கொண்டாட்டம் துவங்கவுள்ளது
அதிரடி-ஆக்ஷன் திரைப்படமான வலிமையை உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சி, உங்களது கோடையை கோலாகலமாக்கத் தயாராகிவிட்டது. மே மற்றும் ஜூன் மாதங்களின் 7 வாரங்களுக்கும் 7 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி, பொழுதுபோக்கினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது ஜீ தமிழ். மே 8, 2022, மாலை 4.30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபபரப்பாகவுள்ள, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' திரைப்படத்துடன் இந்த கோடைக் கொண்டாட்டம் உங்கள் ஜீ தமிழில் துவங்கவுள்ளது. போயபட்டி சீனு இயக்கியுள்ள 'அகண்டா' திரைப்படம் தனது நகரில் உள்ள அனைத்து கெட்டவர்களையும் எதிர்த்து நிற்கும் தீவிர சிவபக்தரான முரளி கிருஷ்ணாவின் (நந்தமுரி பாலகிருஷ்ணா) கதையைக் கூறுகிறது.