சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினம் தினம் டாஸ்க் நடக்கிறதோ இல்லையோ ஏதாவது பிரச்னை மட்டும் தொடர்ந்து நடக்கிறது. பள்ளியில் சிறுவர்கள் 'மிஸ் இவன் என்ன அடிச்சிட்டான், கடிச்சிட்டான்னு' சொல்வது போல் ஹவுஸ்மேட்டுகளும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர். இந்த வாரம் ஹவுஸ்மேட்டுகள் சேவல், கோழி வேஷம் போட்டு முட்டையை தேடும் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இதில், முட்டைய தேடிக் கண்டுபிடிப்பதோடு, அதை திருடு போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நிரூப் டாஸ்க்கின் போது பாலாஜி தன்னை அடித்துவிட்டதாக கூறி சண்டை போட்டார். அதன்பின் நிரூப், ஜூலியை தகாத வார்த்தையில் திட்டினார். இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் அடுத்த பிரச்னையாக பாலாஜிக்கும், ரம்யாவிற்கும் தற்போது சண்டை எழுந்துள்ளது.
பாலாஜி டீமுக்கு சொந்தமான முட்டையை ரம்யா பாண்டியன் திருடிக் கொண்டு ஓடுகிறார். இதை பார்த்துவிட்டு ரம்யாவை தடுப்பதற்காக முயற்சிக்கும் பாலாஜி ரம்யாவை பின்னாடி இருந்து கட்டிப்பிடிக்கிறார். அப்போது ரம்யா பாலாஜியின் கையை கடித்துவிட்டு அவர் பிடியில் இருந்து விடுபடுகிறார். இதனால் இருவருக்குமிடையே சண்டை வருகிறது. எப்படி கடிக்கலாம் என பாலாஜியும், என்னை எப்படி தொடலாம் என ரம்யா பாண்டியனும் மாறி மாறி சண்டை போடுகின்றனர்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் 'இது பிக்பாஸ் வீடா? இல்ல பால்வாடி ஸ்கூலா?' என கலாய்த்து வருகின்றனர். இந்த இருவரில் யார் மீது தவறு அவருக்கு என்ன தண்டனை என்பது இந்த வாரம் குறும்பட நேரத்தின் போது தெரிய வரும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் சனி, ஞாயிறு கிழமைகளுக்கான எபிசோடுகளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.