ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸின் குரலாக கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு அந்த குரலும் ஒரு காரணம். முதல் நான்கு சீசன்களின் போதும் பிக்பாஸின் குரலாக ஒலிப்பது யாருடைய குரல் என்று யாருக்குமே தெரியாது. நான்காவது சீசனின் முடிவில் தான் பிக்பாஸ் குரல் யாருடையது என்ற தகவல் வெளியிடப்பட்டது. தமிழில் ஒளிபரப்பான 5 சீசனுக்குமே பிக்பாஸுக்கு குரல் கொடுத்தவர் சாஷோ என்ற வாய்ஸ் ஆர்டிஸ்ட் தான்.
டப்பிங் ஆர்டிஸ்டாக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட்டிலும் கலக்குவார், அவ்வப்போது போட்டியாளர்களை கலாய்த்தும், தேவையான சமயம் ஆறுதல் சொல்லியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூப்பராக நடத்தி வருகிறார். அவர் சம்பளம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு சாஷோவுக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் சாஷோ தான் குரல் கொடுக்கவுள்ள நிலையில், அதில் அவருக்கு தொகை பெரிய சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.