காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோ சூர்யா கதாபாத்திரத்தில் புது நடிகர் நடிக்க இருப்பதை தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஓளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் 200 எபிசோடுகளை கடந்து ஓடி வருகிறது. இதில் ஹீரோவாக தர்ஷன் கே ராஜூ நடித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி அவருக்கு பதிலாக மிதுன ராசி சீரியலில் நடித்த சுவாமிநாதன் அனந்தராமன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் இந்த தொடரிலும் நன்றாக நடித்து ரசிகர்களின் மதிப்பை பெற்று வந்தார். இந்நிலையில் எந்தவொரு காரணமும் தெளிவாக தெரியாத நிலையில் அவர் சீரியலை விட்டு விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.