ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமாலா பால், 'சிந்து சமவெளி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அமலா பால், 'மைனா' படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு வேட்டை, தெய்வ திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதைத்தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை அமலா பால் வெளியிட்டு வருகிறார். அதற்காக யார் தன்னை கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்துபோவது அவர் வழக்கம். இந்த நிலையில் அவர் பிகினி அணிந்து கடற்கரையில் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, அமலா பாலின் பிட்னஸ் பற்றி பேசினார்கள். மற்றவர்கள் அவரை கிண்டல் செய்தார்கள். இந்த நிலையில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதில் அளித்திருக்கிறார் அமலா பால். அவர் கூறியிருப்பதாவது... “அவள் விரும்பியபடி வாழ்வாள். அதனால் சமூக வலைதளங்களில் பெண்களைக் குறிவைப்பதை நிறுத்தவும். ஒரு பெண் தன் விருப்பப்படி உடை அணிவாள். அவளின் உடை பற்றி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை” எனக் கூறியுள்ளார்.