‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சித்த மருத்துவர் கே.வீரபாபு எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும், ‛முடக்கறுத்தான்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இப்படத்திற்கு சிற்பி இசையமைக்க, பழனிபாரதி பாடல் எழுதுகிறார். இவர்கள் கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் சேர்ந்துள்ளது.
வீரபாபு பேசியதாவது: சின்ன வயதிலேயே சினிமா மீது ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க நினைத்தேன், அது நிஜமாகி உள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதையே ‛முடக்கறுத்தான்'. குழந்தைகளுக்கான ஒரு அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.




