அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சித்த மருத்துவர் கே.வீரபாபு எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும், ‛முடக்கறுத்தான்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இப்படத்திற்கு சிற்பி இசையமைக்க, பழனிபாரதி பாடல் எழுதுகிறார். இவர்கள் கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் சேர்ந்துள்ளது.
வீரபாபு பேசியதாவது: சின்ன வயதிலேயே சினிமா மீது ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க நினைத்தேன், அது நிஜமாகி உள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதையே ‛முடக்கறுத்தான்'. குழந்தைகளுக்கான ஒரு அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.