சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். தற்போது சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ‛இடும்பன்காரி' என்ற படத்தில் நடிக்கிறார். துப்பறியும் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
புதுமுக இயக்குனர் அருள் அஜித் இயக்கும் இதில் நடிகைகள் ஷிவாதா நாயர் மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அனுபமா குமார், 'நீயா நானா' புகழ் கோபிநாத், இயக்குநர் வேலுபிரபாகரன், அருண் மற்றும் ஜோதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கிறார்.
அமீன் ஒளிப்பதிவை கவனிக்க, அருண்ராஜ் இசையமைக்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வர வைக்கும் பிரத்யேக அனுபவத்தை தரும் பரபரப்பு மிக்க துப்பறியும் திரில்லராக இடும்பன்காரி இருக்கும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.