‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி |

ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். தற்போது சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ‛இடும்பன்காரி' என்ற படத்தில் நடிக்கிறார். துப்பறியும் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
புதுமுக இயக்குனர் அருள் அஜித் இயக்கும் இதில் நடிகைகள் ஷிவாதா நாயர் மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அனுபமா குமார், 'நீயா நானா' புகழ் கோபிநாத், இயக்குநர் வேலுபிரபாகரன், அருண் மற்றும் ஜோதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கிறார்.
அமீன் ஒளிப்பதிவை கவனிக்க, அருண்ராஜ் இசையமைக்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வர வைக்கும் பிரத்யேக அனுபவத்தை தரும் பரபரப்பு மிக்க துப்பறியும் திரில்லராக இடும்பன்காரி இருக்கும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.