இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தலைவி படத்தில் நடிகர் தம்பி ராமைய்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்பட பிரஸ்மீட்டில் பேசிய அவர், ‛‛கொரோனா முதல் அலைக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது மாஸ்டர் படம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வர வழைத்தது. இரண்டாவது அலைக்கு பின் இப்போது மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரும் தகுதி உடைய படமாக தலைவி இருக்கும். பெண்களின் ரோல் மாடலாக தலைவி படத்தின் தலைவியாக கங்கனா உள்ளார். கடற்கரையில் உறங்கும் 4 தலைவர்களை வட இந்திய நடிகையை வைத்து மரியாதையை செய்தது சிறப்பான ஒன்று.
எதிரிகளே இல்லாத ஒரு நபர் அரவிந்த்சாமி. இவரைப்போல் நான் அழகாக இருந்திருந்தால் ஒன்று ஜெயிலில் இருப்பேன் அல்லது செத்திருப்பேன் என்றார். ஜாதி, மதம், இனம் கடந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்லும் ஒரு இடம் தியேட்டர்கள். அவை இப்போது மால்களாக, கடைகளாக, திருமண மண்டபங்களாக மாறுகின்றன. அவற்றை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு என்ன பிரச்னை என சிறப்பு கவனம் கொண்டு கேட்டு தியேட்டர்களை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம். தியேட்டர்களை காப்பாற்றிவிட்டால் சினிமாவையும் காப்பாற்றி விடலாம்''. என்றார் தம்பி ராமைய்யா.