செட்டில் பண்ண வேண்டி இருக்கு, படத்தை ஓட வையுங்க : இயக்குனர் விக்னேஷ் சிவன் | கருப்பு படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசிய த்ரிஷா | ஜனநாயகன் லீக் விவகாரம்: கோர்டில் முறையிட்ட தயாரிப்பு நிறுவனம் | ராமாயணா முதல் பாகத்தில் ரன்பீருடன் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை : யஷ் | ஹாய் படத்தின் கண்ணங்குழியா முதல் சிங்கிள் ஏப்ரல் 21ல் ரிலீஸ்! | மூன்று பாகங்களாக உருவாகும் ‛கிருஷ்ணவதாரம்' : மே 7ல் முதல்பாகம் ரிலீஸ் | கங்கை அமரன், சிவாஜி பேரன் நடித்த 'லெனின் பாண்டியன்' டிரைலர் வெளியீடு | நாலு ஹீரோயின் நடிக்கும் படம் : ஆனா, யாருமே ஹீரோயின் இல்ல | 'வாழ 2' வெற்றியை தொடர்ந்து 'வாழ 3' உடனடி அறிவிப்பு | நடிகர் விஜய் மனைவி பிரஸ்மீட் அடுத்த வாரம் நடக்குதா? |

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் பா. ரஞ்சித், மன்னர் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசினார். ராஜராஜ சோழன் ஒரு அயோக்கியன் அவன் ஆட்சி காலத்தில் தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவன் ஆட்சி காலம் இருண்ட காலம். அவன் ஆட்சிக் காலத்தில்தான் டெல்டா பகுதியில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது. என்று பேசினார்.
பா. ரஞ்சித்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது . இது குறித்து பலரும் போலீசில் புகார் அளித்தனர். பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவில், வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்ட குறிப்புகளையே தான் பேசியதாகவும், இதே கருத்தை பலரும் பேசி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு விளக்கமும் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.




