''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் பா. ரஞ்சித், மன்னர் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசினார். ராஜராஜ சோழன் ஒரு அயோக்கியன் அவன் ஆட்சி காலத்தில் தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவன் ஆட்சி காலம் இருண்ட காலம். அவன் ஆட்சிக் காலத்தில்தான் டெல்டா பகுதியில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது. என்று பேசினார்.
பா. ரஞ்சித்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது . இது குறித்து பலரும் போலீசில் புகார் அளித்தனர். பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவில், வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்ட குறிப்புகளையே தான் பேசியதாகவும், இதே கருத்தை பலரும் பேசி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு விளக்கமும் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.