காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் ஆகிய ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமா உலகில் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது பற்றிய பல துறைகளின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
தற்போது அமலாக்கப் பிரிவு இது குறித்த விசாரணையை தெலுங்குத் திரையுலக பிரபலங்களிடம் நடத்தி வருகிறது. தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் நேற்று விசாரணைக் குழுவினர் முன் ஆஜரானார். இந்த வழக்கில் 12 தெலுங்கு சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களிடம் 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. நேற்று அவற்றை பூரி ஜெகன்னாத் விசாரணைக் குழுவிடம் அளித்துள்ளார். நேற்று அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இன்று பூரி ஜெகன்னாத் உடன் சினிமா தயாரிப்பாளராக இருக்கும் நடிகை சார்மி அமலாக்கப் பிரிவு முன் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு விசாரணைக்கு ஆஜராகும் போது காவலர் ஒருவர் தன்னைத் தொட்டார் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார் சார்மி. அதனால், இந்த முறை முழுவதும் பெண் காவலர்களை பாதுகாப்பிற்கு நிறுத்த உள்ளார்களாம்.
இந்த விசாரணை விவகாரங்களால் டோலிவுட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




