'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்குத் திரையுலகில் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா தம்பதியினரின் திருமண வாழ்க்கையைப் பற்றிய செய்திகள்தான் மிகவும் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பல வருட காதலுக்குப் பிறகு நாக சைதன்யா, சமந்தா இருவரும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அவர்களுக்குள் பிரிவினை வந்துவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பாக எழுதி வருகின்றன.
சமந்தா தற்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிராமப்பகுதி ஒன்றில் தனது தோழி குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்த நாளன்று சமந்தா அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த சில முக்கிய நடிகர்கள், நடிகைகளுக்கு தனது மகன் நாக சைதன்யாவுக்கு வாழ்த்துக்கு நன்றி தெரிவித்திருந்தார் நாகார்ஜுனா. ஆனால், இதுவரையிலும் சமந்தாவுக்கு அவர் நன்றி தெரிவிக்கவில்லை.
இதைக் கூட தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள். தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை விரைவில் தொகுத்து வழங்க உள்ளார் நாகார்ஜுனா. அதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். தனது மகன் நாக சைதன்யா, சமந்தா பற்றி அதில் கேள்வி எழுந்தால் என்ன செய்வது என நாகார்ஜுனா யோசித்து வருவதாகவும், அந்த சந்திப்பையே ரத்து செய்யலாமா, அல்லது நடத்தலாமா என தயங்கி வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.