நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் அர்ச்சனா. அதையடுத்து பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்தநிலையில் அர்ச்சனாவுக்கு சமீபத்தில் மூளைக்கு அருகே சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதையடுத்து வீட்டிற்கு திரும்பிய அவர் இன்னும் சில மாதங்களில் எனது தொகுப்பாளர் பணியை தொடருவேன் என்றும் ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது யு-டியூப்பில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் எப்போது மீண்டும் பணிக்கு திரும்புவீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, ‛‛இப்போது கூட பணிக்கு வர ஆசை தான். ஆனால் எனது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தசைகளை எடுத்து என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் நீண்டநேரம் நின்று கொண்டே பேச முடியாது. சில மாதங்கள் ஆகலாம். அடுத்தவாரம் டாக்டரை சந்திக்க உள்ளேன். அதன்பின் தான் தெரியும் என தெரிவித்துள்ளார்.