'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் அர்ச்சனா. அதையடுத்து பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்தநிலையில் அர்ச்சனாவுக்கு சமீபத்தில் மூளைக்கு அருகே சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதையடுத்து வீட்டிற்கு திரும்பிய அவர் இன்னும் சில மாதங்களில் எனது தொகுப்பாளர் பணியை தொடருவேன் என்றும் ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது யு-டியூப்பில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் எப்போது மீண்டும் பணிக்கு திரும்புவீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, ‛‛இப்போது கூட பணிக்கு வர ஆசை தான். ஆனால் எனது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தசைகளை எடுத்து என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் நீண்டநேரம் நின்று கொண்டே பேச முடியாது. சில மாதங்கள் ஆகலாம். அடுத்தவாரம் டாக்டரை சந்திக்க உள்ளேன். அதன்பின் தான் தெரியும் என தெரிவித்துள்ளார்.