மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் அர்ச்சனா. அதையடுத்து பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்தநிலையில் அர்ச்சனாவுக்கு சமீபத்தில் மூளைக்கு அருகே சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதையடுத்து வீட்டிற்கு திரும்பிய அவர் இன்னும் சில மாதங்களில் எனது தொகுப்பாளர் பணியை தொடருவேன் என்றும் ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது யு-டியூப்பில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் எப்போது மீண்டும் பணிக்கு திரும்புவீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, ‛‛இப்போது கூட பணிக்கு வர ஆசை தான். ஆனால் எனது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தசைகளை எடுத்து என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் நீண்டநேரம் நின்று கொண்டே பேச முடியாது. சில மாதங்கள் ஆகலாம். அடுத்தவாரம் டாக்டரை சந்திக்க உள்ளேன். அதன்பின் தான் தெரியும் என தெரிவித்துள்ளார்.