ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் அர்ச்சனா. அதையடுத்து பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்தநிலையில் அர்ச்சனாவுக்கு சமீபத்தில் மூளைக்கு அருகே சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதையடுத்து வீட்டிற்கு திரும்பிய அவர் இன்னும் சில மாதங்களில் எனது தொகுப்பாளர் பணியை தொடருவேன் என்றும் ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது யு-டியூப்பில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் எப்போது மீண்டும் பணிக்கு திரும்புவீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, ‛‛இப்போது கூட பணிக்கு வர ஆசை தான். ஆனால் எனது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தசைகளை எடுத்து என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் நீண்டநேரம் நின்று கொண்டே பேச முடியாது. சில மாதங்கள் ஆகலாம். அடுத்தவாரம் டாக்டரை சந்திக்க உள்ளேன். அதன்பின் தான் தெரியும் என தெரிவித்துள்ளார்.