'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் டைமண்ட் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது அணியை சேர்ந்த வீ.கே. சுந்தர், துணை தலைவராகவும், யுவராஜ் செயலாளராகவும், கணேஷ்குமார், முத்துராமலிங்கம் இணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எதிர் அணியை சேர்ந்த கோவிந்தராஜ் துணை தலைவராகவும், குமரேசன் பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள்.
இவர்கள் தவிர ஆறுமுகம், புவன், தர்மா, இனியன், கிளாமர் சத்யா, சாவித்ரி, ராஜேஷ்,வெங்கட், திரைநீதி செல்வம். ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். மூத்த மக்கள் தொடர்பாளர்கள் விபி மணி, கண்ணதாசன், பாரிவள்ளல் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.




