தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் டைமண்ட் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது அணியை சேர்ந்த வீ.கே. சுந்தர், துணை தலைவராகவும், யுவராஜ் செயலாளராகவும், கணேஷ்குமார், முத்துராமலிங்கம் இணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எதிர் அணியை சேர்ந்த கோவிந்தராஜ் துணை தலைவராகவும், குமரேசன் பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள்.
இவர்கள் தவிர ஆறுமுகம், புவன், தர்மா, இனியன், கிளாமர் சத்யா, சாவித்ரி, ராஜேஷ்,வெங்கட், திரைநீதி செல்வம். ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். மூத்த மக்கள் தொடர்பாளர்கள் விபி மணி, கண்ணதாசன், பாரிவள்ளல் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.