என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்ஷரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் |
காமெடி நடிகர் ரோபோ சங்கர் காமெடி மட்டுமில்லாமல் சமூக சேவையில் தன்னை முன்னிறுத்தி முதல் ஆளாக களமிறங்குபவர். வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேடிச்சென்று உதவுவது என பல பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.
கொரோனா முதல் அலையின்போது அரசு அலுவலர்களின் மன உளைச்சலை போக்க அரசு அலுவலகங்களுக்கும், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், கொரோனா சிகிச்சை வார்டுகளுக்கும் சென்று அவர்கள் முன்னால் காமெடியாக பேசி மகிழ்ச்சிபடுத்தி வந்தார். தற்போது இரண்டாவது அலையிலும் அந்த பணியை சுதந்திர தினத்தன்று தொடங்கி இருந்கிறார். இந்த முறை சிறுவர் சீர்திருத்த பள்ளி மாணவர்கள், சிறைச்சாலை கைதிகளுக்கு இந்த பணியை முன்னெடுத்து செல்ல இருக்கிறார்.
முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். முதற்கட்ட முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார்.