கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தென்னிந்திய அளவில் பிசியாக நடித்துவந்த புட்டபொம்மா அழகி பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளதால் முன்னைவிட கூடுதல் பிஸியாகி விட்டார். இந்தநிலையில் தான், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பூஜாவை தேடி வந்தது. ஏற்கனவே த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் டைரக்சனில் நடித்த இரண்டு படங்கள் தான் பூஜா ஹெக்டேவை ராசியான நடிகையாக மாற்றின.
அதேபோல மகரிஷி படத்தை தொடர்ந்து மீண்டும் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் வாய்ப்பு வேறு. ஒருவாறாக தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கால்ஷீட் கொடுத்துவிட்டார் பூஜா ஹெக்டே. இதனால் வழக்கமாக இரண்டரை கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டேவுக்கு போனசாக 5௦ லட்சம் சேர்த்து 3 கோடியாக சம்பளத்தை உயர்த்திவிட்டதாம் தயாரிப்பாளர் தரப்பு.