ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

தென்னிந்திய அளவில் பிசியாக நடித்துவந்த புட்டபொம்மா அழகி பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளதால் முன்னைவிட கூடுதல் பிஸியாகி விட்டார். இந்தநிலையில் தான், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பூஜாவை தேடி வந்தது. ஏற்கனவே த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் டைரக்சனில் நடித்த இரண்டு படங்கள் தான் பூஜா ஹெக்டேவை ராசியான நடிகையாக மாற்றின.
அதேபோல மகரிஷி படத்தை தொடர்ந்து மீண்டும் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் வாய்ப்பு வேறு. ஒருவாறாக தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கால்ஷீட் கொடுத்துவிட்டார் பூஜா ஹெக்டே. இதனால் வழக்கமாக இரண்டரை கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டேவுக்கு போனசாக 5௦ லட்சம் சேர்த்து 3 கோடியாக சம்பளத்தை உயர்த்திவிட்டதாம் தயாரிப்பாளர் தரப்பு.