இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் 'ஷூட்டிங்' அனுமதியின்றி நடந்ததால், இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் 'ஷூட்டிங்' நடந்தது. இதைக்காண, நுாற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி திரண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் 'ஷூட்டிங்கை' நிறுத்தினர். அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், பல அரசு துறைகளிடம் அனுமதி பெறாமல் 'ஷூட்டிங்' நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆனைமலை போலீசார் 'டான்' திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்பட, 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வருவாய்த்துறையினர், 19,400 ரூபாய் அபராதம் விதித்து விசாரிக்கின்றனர்.
ஆனைமலை எஸ்.ஐ., சின்ன காமணன் கூறுகையில், ''இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது குழுவினர், 30 பேர் மீது, கொரோனா பரவும் என்பதை தெரிந்தும் கூட்டமாக கூடியது, அனுமதியின்றி கூட்டத்தை சேர்த்தியது, ஊரடங்கு காலத்தில் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது உள்பட, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.