அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
2019ம் ஆண்டு சாருஹாசன், ஜனகராஜ், பாலா சிங், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தாதா 87. இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ தயாரித்து, இயக்கியிருந்தார். சாய்குமார் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ஒன் பை டூ தனது படத்தின் அதிகாரபூர்வமற்ற ரீமேக் என்று குற்றம் சாட்டி உள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாவுடன் இணைந்து தயாரித்த படம் தாதா 87. தற்சமயம் பவுடர் ,பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருகிறது. இது தாதா 87 படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
ஒன் பை டூ படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பயன்படுத்தி இருப்பதும், சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பதும் வருந்தத்தக்கது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். என்று குறிப்பிட்டுள்ளார்.