சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

2019ம் ஆண்டு சாருஹாசன், ஜனகராஜ், பாலா சிங், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தாதா 87. இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ தயாரித்து, இயக்கியிருந்தார். சாய்குமார் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ஒன் பை டூ தனது படத்தின் அதிகாரபூர்வமற்ற ரீமேக் என்று குற்றம் சாட்டி உள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாவுடன் இணைந்து தயாரித்த படம் தாதா 87. தற்சமயம் பவுடர் ,பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருகிறது. இது தாதா 87 படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
ஒன் பை டூ படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பயன்படுத்தி இருப்பதும், சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பதும் வருந்தத்தக்கது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். என்று குறிப்பிட்டுள்ளார்.




