ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து' ஆகிய ஆபாசப் படங்களையும், 'கஜினிகாந்த்' என்ற காமெடி படத்தையும் இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அவர் கடைசியாக இயக்கிய 'இரண்டாம் குத்து' எனும் ஆபாச படத்தில் அவரே கதாநாயகனாகவும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அவரை கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்கவில்லை என்பது அவருக்கே புரிந்துவிட்டது போலும். அதனால், மீண்டும் இயக்கத்திற்கே திரும்பிவிட்டார்.
அவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்க உள்ளார்கள். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது.
கடந்த வாரம் டிவியில் நேரடியாக வெளியான 'வெள்ளை யானை' படத்தைத் தயாரித்தவரும், தற்போது விஷால், ஆர்யா நடிக்கும் 'எனிமி' படத்தைத் தயாரிப்பவருமான வினோத் குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படம் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் பூஜை புகைப்படங்களுடன் பதிவிட்டு, “பின்குறிப்பு - இந்தப் படம் ஒரு ஆக்ஷன் என்டர்டெயினர்” எனக் குறிப்பிட்டுள்ளார். தான் ஆபாசப்படம் எடுக்கவில்லை என்பதை ரசிர்களுக்குப் புரிய வேண்டும் என தனியாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.