ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
'ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து' ஆகிய ஆபாசப் படங்களையும், 'கஜினிகாந்த்' என்ற காமெடி படத்தையும் இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அவர் கடைசியாக இயக்கிய 'இரண்டாம் குத்து' எனும் ஆபாச படத்தில் அவரே கதாநாயகனாகவும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அவரை கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்கவில்லை என்பது அவருக்கே புரிந்துவிட்டது போலும். அதனால், மீண்டும் இயக்கத்திற்கே திரும்பிவிட்டார்.
அவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்க உள்ளார்கள். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது.
கடந்த வாரம் டிவியில் நேரடியாக வெளியான 'வெள்ளை யானை' படத்தைத் தயாரித்தவரும், தற்போது விஷால், ஆர்யா நடிக்கும் 'எனிமி' படத்தைத் தயாரிப்பவருமான வினோத் குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படம் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் பூஜை புகைப்படங்களுடன் பதிவிட்டு, “பின்குறிப்பு - இந்தப் படம் ஒரு ஆக்ஷன் என்டர்டெயினர்” எனக் குறிப்பிட்டுள்ளார். தான் ஆபாசப்படம் எடுக்கவில்லை என்பதை ரசிர்களுக்குப் புரிய வேண்டும் என தனியாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.