பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

தென்னிந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் வெளிவர உள்ள படங்களில் சில படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத்தில் தயாராகியுள்ள 'கேஜிஎப் 2', தெலுங்கில் தயாராகியுள்ள 'புஷ்பா' ஆகிய இரண்டு படங்களும் அதில் அடங்கும். இந்த இரண்டு படங்களையும் தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியிலும் வெளியிட உள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. அதன் முதல் பாகத்தை இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யஷ் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படத்தையும் அதே விடுமுறையில் வெளியிடப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இப்படி இரண்டு பிரம்மாண்ட படங்களும் ஒரே சமயத்தில் வெளியானால் தியேட்டர்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவும். அதிலும் இரண்டு படத்தையுமே பான்-இந்தியா படமாகத்தான் வெளியிடப் போகிறார்கள். இப்படி ஒரே சமயத்தில் போட்டி போட்டால் வேறு எந்த படங்களும் அந்த நேரத்தில் வெளியாக முடியாது.
இதில் ஏதாவது மாற்றம் வருமா இல்லையா என்பது விரையில் தெரிந்துவிடும்.