மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் வெளிவர உள்ள படங்களில் சில படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத்தில் தயாராகியுள்ள 'கேஜிஎப் 2', தெலுங்கில் தயாராகியுள்ள 'புஷ்பா' ஆகிய இரண்டு படங்களும் அதில் அடங்கும். இந்த இரண்டு படங்களையும் தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியிலும் வெளியிட உள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. அதன் முதல் பாகத்தை இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யஷ் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படத்தையும் அதே விடுமுறையில் வெளியிடப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இப்படி இரண்டு பிரம்மாண்ட படங்களும் ஒரே சமயத்தில் வெளியானால் தியேட்டர்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவும். அதிலும் இரண்டு படத்தையுமே பான்-இந்தியா படமாகத்தான் வெளியிடப் போகிறார்கள். இப்படி ஒரே சமயத்தில் போட்டி போட்டால் வேறு எந்த படங்களும் அந்த நேரத்தில் வெளியாக முடியாது.
இதில் ஏதாவது மாற்றம் வருமா இல்லையா என்பது விரையில் தெரிந்துவிடும்.