அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் | கமல் படம் தான் ரஜினியின் கடைசி படமா... : உண்மை நிலவரம் என்ன? | 'பாகுபலி'க்கு வழிவிடுகிறாராம் விஷ்ணு விஷால்: 'ஆர்யன்' தெலுங்கு ரிலீஸ் தள்ளிவைப்பு | நவம்பர் 7ம் தேதி வெளியாகும் 'பிரிடேட்டர்' படத்தின் புதிய பாகம்: தமிழிலும் பார்க்கலாம் | முன்பதிவில் நல்ல வரவேற்பில் 'பாகுபலி தி எபிக்' | பிளாஷ்பேக்: தமிழில் டப் செய்யப்பட்ட கார்த்திக் படம் | பிளாஷ்பேக்: காத்தவராயனாக நடிக்க மறுத்த எம்ஜிஆர், நடித்து வெற்றி பெற்ற சிவாஜி | 'காந்தாரா சாப்டர் 1' நான்கு வார ஓடிடி வெளியீடு, ஏன்? |

தென்னிந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் வெளிவர உள்ள படங்களில் சில படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத்தில் தயாராகியுள்ள 'கேஜிஎப் 2', தெலுங்கில் தயாராகியுள்ள 'புஷ்பா' ஆகிய இரண்டு படங்களும் அதில் அடங்கும். இந்த இரண்டு படங்களையும் தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியிலும் வெளியிட உள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. அதன் முதல் பாகத்தை இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யஷ் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படத்தையும் அதே விடுமுறையில் வெளியிடப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இப்படி இரண்டு பிரம்மாண்ட படங்களும் ஒரே சமயத்தில் வெளியானால் தியேட்டர்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவும். அதிலும் இரண்டு படத்தையுமே பான்-இந்தியா படமாகத்தான் வெளியிடப் போகிறார்கள். இப்படி ஒரே சமயத்தில் போட்டி போட்டால் வேறு எந்த படங்களும் அந்த நேரத்தில் வெளியாக முடியாது.
இதில் ஏதாவது மாற்றம் வருமா இல்லையா என்பது விரையில் தெரிந்துவிடும்.