தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். தற்போது கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இப்படத்தை முடித்துக் கொடுக்காமலேயே தெலுங்கில் ராம் சரண் படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். அடுத்து ரன்வீர் சிங்கை வைத்து 'அந்நியன்' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்.
தங்களது 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்தப் படத்திற்கும் ஷங்கர் போகக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, ராம் சரண் தற்போது நடித்து வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பில் உள்ளார். ஜுலை மாதத்திற்குள் அவரது வேலைகள் முடிந்து விடும் எனத் தெரிகிறது. எனவே, ஷங்கர் படத்தை ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
ஆனால், 'இந்தியன் 2' வழக்கின் தீர்ப்பு தெரியாமல் ராம் சரண் படத்தை ஷங்கர் இயக்க போகவும் முடியாது. எனவே, தனது படம் குறித்து முடிவு செய்ய ஷங்கருக்கு ராம் சரண் ஒரு வாரம் 'டைம்' கொடுத்துள்ளார் என்றும், அதற்குள் அவரது முடிவைத் தெரிவிக்குமாறும் கூறியுள்ளாராம். இல்லையெனில் வேறு இயக்குனரின் படத்தில் நடிக்க ராம் சரண் முடிவெடுக்க வேண்டும் என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.