துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதை அடுத்து, விஜய் சேதுபதியும் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தனித்தீவில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதில் இறுதி வரை நின்று வெற்றி பெறுபவரை வெற்றியாளராக அறிவிக்கும் சர்வைவர் எனும் நிகழ்ச்சி ஒன்று விரைவில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. மூன்று மாத காலம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் இதற்கான நிகழ்வு படமாக்கப்பட உள்ளது. தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் சிலரிடம் பேசி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.