தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் திரைப்படத் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பொருளாளர் தியாகராஜன் அனுப்பியுள்ள அறிக்கையின் சுருக்கம்: திரைத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சனையால் தற்போது 10 சதவீதம் மட்டுமே லாபம் பெறுகிறோம். ஆண்டுதோறும் சினிமா பற்றால் 70 சதவீதத்தினர் சினிமா நோக்கி வருகின்றனர். ஆனால் அவர்களில் 90 சதவீதத்தினர் தோல்வியையே சந்திக்கின்றனர்.
மூலதனத்தை மீட்பதில் கடினமாக உள்ள சூழலில், 2021-22 நிதியாண்டில் 194-ஜெ பிரிவின் கீழ், ஆதாய உரிமையில் 10 சதவீதம் வருமானவரி பிடித்தம் (டி.டி.எஸ்) செய்ய உத்தரவிட்டுள்ளது பேரிடியாக உள்ளது. பலர் தோல்வியை சந்திப்பதால், வருமானவரி பிடித்தத்தை உரிமைகோரி எந்த பயனும் இல்லை. திரையுலகம் மீண்டெழும் வரை 10 சதவீதத்திற்கு பதில் 2 சதவீதம் மட்டுமே வரிப்பிடித்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கோரியுள்ளார்.