டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா ஒரு தொலைக்காட்சியில் நடைபெற்ற டாக் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், தனது பெற்றோர் இறந்துவிட்டதாகவும், அதனால் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்ற தான் ஆட்டோ ஒட்டி சம்பாதிப்பதாகவும் அந்த வருமானம் போதுமானதாக இல்லை எனவும் தனது கஷ்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதை கேட்ட சமந்தா, அப்போதே அவருக்கு ஒரு கார் வாங்கி தருவதாகவும் அதை வைத்து ட்ராவல்ஸ் நடத்தி இன்னும் அதிகப்படியான வருமானம் ஈட்டிக்கொள்ளலாம் என்றும் அவருக்கு நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். தற்போது சொன்னபடி செய்தும் காட்டி விட்டார் சமந்தா. ஆம். சுமார் 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு பரிசாக அளித்து, அவரது வாழ்க்கையில் புதிய வாசலை திறந்துவிட்டுள்ளார் சமந்தா. அவரது இந்த உதவும் குணம் பற்றித்தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஒரே பேச்சாக இருக்கிறது.