சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா ஒரு தொலைக்காட்சியில் நடைபெற்ற டாக் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், தனது பெற்றோர் இறந்துவிட்டதாகவும், அதனால் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்ற தான் ஆட்டோ ஒட்டி சம்பாதிப்பதாகவும் அந்த வருமானம் போதுமானதாக இல்லை எனவும் தனது கஷ்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதை கேட்ட சமந்தா, அப்போதே அவருக்கு ஒரு கார் வாங்கி தருவதாகவும் அதை வைத்து ட்ராவல்ஸ் நடத்தி இன்னும் அதிகப்படியான வருமானம் ஈட்டிக்கொள்ளலாம் என்றும் அவருக்கு நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். தற்போது சொன்னபடி செய்தும் காட்டி விட்டார் சமந்தா. ஆம். சுமார் 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு பரிசாக அளித்து, அவரது வாழ்க்கையில் புதிய வாசலை திறந்துவிட்டுள்ளார் சமந்தா. அவரது இந்த உதவும் குணம் பற்றித்தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஒரே பேச்சாக இருக்கிறது.