நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சில தினங்களுக்கு முன் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‛‛எனக்கும் சொந்தமாக ஒரு வீடு கட்டும் கனவு இருந்தது. நானும் கஷ்டப்பட்டு கட்டினேன். அங்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்னு பார்த்தால் ஒரு பிரச்னை. நம்ம என்ன கோழையா, எப்படி அமைதியா இருக்க முடியும். இப்போது இந்த பிரச்னை பெரிதாகிவிட்டது, அதான் உங்களிடம் பேசுகிறேன்'' என கூறியிருந்தார்.
இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் என்ன பிரச்னை என்பது போன்று ஒரு தோற்றம் உருவானது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் மதில். இதில் இவருடன் மைம் கோபி, மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலே கே.எஸ்.ரவிக்குமார் வீடியோவில் கூறிய விஷயம் தான் இந்தபடத்தின் கதை. இந்தப்படம் இப்போது நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்., 14ல் வெளியாகிறது. இதற்கான புரொமோஷனை தான் இப்படி வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர்.