'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! |
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சில தினங்களுக்கு முன் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‛‛எனக்கும் சொந்தமாக ஒரு வீடு கட்டும் கனவு இருந்தது. நானும் கஷ்டப்பட்டு கட்டினேன். அங்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்னு பார்த்தால் ஒரு பிரச்னை. நம்ம என்ன கோழையா, எப்படி அமைதியா இருக்க முடியும். இப்போது இந்த பிரச்னை பெரிதாகிவிட்டது, அதான் உங்களிடம் பேசுகிறேன்'' என கூறியிருந்தார்.
இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் என்ன பிரச்னை என்பது போன்று ஒரு தோற்றம் உருவானது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் மதில். இதில் இவருடன் மைம் கோபி, மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலே கே.எஸ்.ரவிக்குமார் வீடியோவில் கூறிய விஷயம் தான் இந்தபடத்தின் கதை. இந்தப்படம் இப்போது நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்., 14ல் வெளியாகிறது. இதற்கான புரொமோஷனை தான் இப்படி வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர்.