ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சில தினங்களுக்கு முன் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‛‛எனக்கும் சொந்தமாக ஒரு வீடு கட்டும் கனவு இருந்தது. நானும் கஷ்டப்பட்டு கட்டினேன். அங்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்னு பார்த்தால் ஒரு பிரச்னை. நம்ம என்ன கோழையா, எப்படி அமைதியா இருக்க முடியும். இப்போது இந்த பிரச்னை பெரிதாகிவிட்டது, அதான் உங்களிடம் பேசுகிறேன்'' என கூறியிருந்தார்.
இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் என்ன பிரச்னை என்பது போன்று ஒரு தோற்றம் உருவானது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் மதில். இதில் இவருடன் மைம் கோபி, மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலே கே.எஸ்.ரவிக்குமார் வீடியோவில் கூறிய விஷயம் தான் இந்தபடத்தின் கதை. இந்தப்படம் இப்போது நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்., 14ல் வெளியாகிறது. இதற்கான புரொமோஷனை தான் இப்படி வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர்.