தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோ என இப்போதும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன். அஜித்தின் மனைவி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமான 'அனியத்தி பிறாவு' படத்தின் மூலம் தான் இவரும் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மலையாள நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் நுழைந்து ரசிகர்களை வசப்படுத்தி வரும் நிலையில், முதன்முறையாக ரெண்டகம் என்கிற படத்தின் மூலம் தற்போது குஞ்சாக்கோ போபனும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது.
மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். அந்தவகையில் சுமார் 25 வருடங்கள் கழித்து அரவிந்த்சாமியும் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் படம் இது என்றும் சொல்லலாம். இந்த படத்தை டி.பி.பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த 'தீவண்டி' என்கிற வெற்றி படத்தை இயக்கியவர். நடிகர் ஆர்யா பங்குதாரராக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.