அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல் | ‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் |
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'காடன்'.. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் மும்மொழிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் தெலுங்கில் 'ஆரண்யா' என்றும் இந்தியில் 'ஹாத்தி மேரே சாத்தி' என்கிற பெயரிலும் வரும் மார்ச்-26 அன்று ஒரே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்தி பதிப்பான 'ஹாத்தி மேரே சாத்தி'யின் ரிலீஸ் தேதி மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அம்மாநில அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவு போட்டுள்ளது.
இந்த உத்தரவு ஒருபக்கம், கொரோன அச்சத்தால் தியேட்டருக்கு மக்கள் வர அஞ்சுவது இன்னொரு பக்கம் என, இந்த சமயத்தில், 'ஹாத்தி மேரே சாத்தி' வெளியானால் மிகப்பெரிய வசூல் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இதன் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அதேசமயம் தமிழ் மற்றும் தெலுங்கில், ஏற்கனவே அறிவித்த தேதியில் (மார்ச்-26) இந்தப்படம் வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை.