பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'காடன்'.. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் மும்மொழிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் தெலுங்கில் 'ஆரண்யா' என்றும் இந்தியில் 'ஹாத்தி மேரே சாத்தி' என்கிற பெயரிலும் வரும் மார்ச்-26 அன்று ஒரே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்தி பதிப்பான 'ஹாத்தி மேரே சாத்தி'யின் ரிலீஸ் தேதி மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அம்மாநில அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவு போட்டுள்ளது.
இந்த உத்தரவு ஒருபக்கம், கொரோன அச்சத்தால் தியேட்டருக்கு மக்கள் வர அஞ்சுவது இன்னொரு பக்கம் என, இந்த சமயத்தில், 'ஹாத்தி மேரே சாத்தி' வெளியானால் மிகப்பெரிய வசூல் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இதன் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அதேசமயம் தமிழ் மற்றும் தெலுங்கில், ஏற்கனவே அறிவித்த தேதியில் (மார்ச்-26) இந்தப்படம் வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை.