புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அவரது 46வது படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் படப்பிடிப்பு நடந்தபோது அதனை காண ஏராளமானோர் குவிந்தனர். மீண்டும் கொரோனா பரவி வருவதால் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். கொரோனா விதிகளை கடைபிடிக்காமல் படிப்பிடிப்பு நடத்திய சினிமா குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் நேற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் போட்டோ எடுக்க முயன்றார். அவரை அங்கிருந்த படப்பிடிப்பு பாதுகாவலர்கள் தடுத்தனர். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளரை மிரட்டல் விடுக்கும் வகையில் பாதுகாவலர்கள் பேசி உள்ளனர். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது பதட்டமான சூழல் உருவானது. பின்னர் அவர்களை நடிகர் விஜய் சேதுபதி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. மேலும் மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் காவலம் நிலையம் அழைத்து விசாரித்தனர்.