துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அவரது 46வது படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் படப்பிடிப்பு நடந்தபோது அதனை காண ஏராளமானோர் குவிந்தனர். மீண்டும் கொரோனா பரவி வருவதால் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். கொரோனா விதிகளை கடைபிடிக்காமல் படிப்பிடிப்பு நடத்திய சினிமா குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் நேற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் போட்டோ எடுக்க முயன்றார். அவரை அங்கிருந்த படப்பிடிப்பு பாதுகாவலர்கள் தடுத்தனர். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளரை மிரட்டல் விடுக்கும் வகையில் பாதுகாவலர்கள் பேசி உள்ளனர். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது பதட்டமான சூழல் உருவானது. பின்னர் அவர்களை நடிகர் விஜய் சேதுபதி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. மேலும் மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் காவலம் நிலையம் அழைத்து விசாரித்தனர்.