புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் நிரஞ்சனி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் தான் நிரஞ்சனி.
ஆடை வடிவமைப்பாளரான நிரஞ்சனி, டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இடையே காதல் ஏற்பட்டது. சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தனது தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தார் நிரஞ்சனி. இந்த போட்டோவை அகத்தியனின் மூத்த மகளும் நடிகையுமான விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த போட்டோக்கள் வைரலானது.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி, நிரஞ்சனியின் திருமணம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகை சேர்ந்த பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.