மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை | பிளாஷ்பேக் : எம்ஜிஆர் விழா நடத்தி விருது கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு |
டிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் படம் மாயமுகி. பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார். இன்னொருவன், அவள் பெயர் தமிழரசி , நீர்ப்பறவை, வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மனோ சித்ரா மீண்டும் நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சத்யதேவ், தூத்துக்குடி கார்த்திகா, ஆம்னி, சுவாதி உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரகாஷ் என்.பத்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெயன் பாலா இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் மாயமுகி இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.
படம் பற்றி இயக்குனர் ரவி நாயக் கூறியதாவது: தமிழ் சினிமாவில் பேண்டஸி திரைப்படங்களின் வருகை மிக மிக அரிதாகி வரும் நிலையில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் ஆன்மீக பேண்டஸி திரைப்படமாக உருவாகிறது. பேண்டஸி ஜானர் திரைப்படமாக இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசுகிறது. என்கிறார்.